வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கவிஞனில்லை தந்திரக்காரன்



நீங்கஅறீவீர்களா
நான்
கவிஞனில்லை
தந்திரக்காரன்
வார்த்தைகளை
கொண்டு
தந்திரங்கள்
செய்பவன்
சொற்களை உடைத்தும்
கலைத்து பின்
சேர்த்தும்
உங்கள் விழிகள்
அறியாமல்
வேடிக்கை காட்டும்
ரசவாதி
எனது
கவிதைகள்
என்பது
கட்டுக்களை உடைத்து
செல்வதுமில்லை
சாஸ்வதம் குறித்து
பேசவுமில்லை
உங்கள் கண்ணீரை
இல்லை ஆமோதிப்பை
ஏந்தியதும் இல்லை
அவைகள்
சாலையோர
விருட்சங்கள்
பயணிக்கையில்
உங்கள் விருப்பத்தின்
பேரில் சற்று
ஓய்வெடுக்கலாம்
ஆனால்
எனக்கோ
அது தீராத மழை
எப்போதும்
நினைகிறேன்
ஒரு சிறுவனென
குதுகலித்து

No comments:

Post a Comment