வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!

தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!
(Where the past comes alive...)


– என்று தலைப்பிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு போஸ்டரை
வெளியிட்டிருக்கிறது. அதில், ராமரும், லக்ஷ்மணரும் நின்று கொண்டிருக்க, வானரர்கள் பெரும் கற்களைச் சுமந்து, சமுத்திரத்தில் பாலம் அமைத்துக் கொண்டிருக்கும் காட்சி ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது.

தவிர,

""...ராமபிரானின் தாமரைப் பாதங்களின் ஆசிகளை, இன்னமும் இந்தத் தண்ணீர்
தாங்கி நிற்கிறது;

...வானர சேனை இலங்கைக்குச் சென்று சீதையைக் காப்பாற்ற, சமுத்திரத்தைக் கடந்த இடம் இதுதான்''




– என்றும் அந்த போஸ்டரில், தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சொல்லி இருக்கிறது. இந்த போஸ்டர் ஒரு விளம்பரமாக, ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஜனசதாப்தி ரயில் வண்டியில் வைக்கப்பட்டுள்ளது.

இதில், "சேது பாலம்' என்று எதுவும் இல்லையே என்ற குறை யாருக்கும் இருக்க வேண்டாம். தமிழகச் சுற்றுலாத் துறை, ராமேஸ்வரம் பற்றி வெளியிட்டுள்ள கையேட்டில் (கச்ட்ணீடடூஞுt) "சேது பாலத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சேது பந்தனம் என்கிற மிதக்கும் கல், இங்கே பார்க்க வேண்டிய விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம், "ராமர் பாலமும் இல்லை; ராமரும் இல்லை; எல்லாம் கற்பனை' என்று முதல்வர் சொல்கிறார். மறுபுறத்தில் அவருடைய தமிழக அரசு, ராமர் வரலாற்றின் ஒரு பகுதியையும், அவர் மீதான பக்தியையும் விளம்பரப்படுத்தி வருவாய் ஈட்ட முனைகிறது.

ராமரை போற்றினால், வளம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ, கலைஞரின் தமிழக அரசு நம்புகிறது.



"முரசொலி'யில், கலைஞர் இவ்வாறு ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்.

ஒரு விளக்கம்

28.9.2007 தேதியிட்ட "முரசொலி'யில், கலைஞர் இவ்வாறு ஒரு குறிப்பு
எழுதியிருக்கிறார்.

"மது' என்றால் கள்ளோ சாராயமோ அல்ல "தேன்' என்று பொருள்படும் என்கிறார் நண்பர் "சோ'. அப்படியானால், "மதுவிலக்கு சட்டம் என்பதற்கு "தேன்' விலக்கு சட்டம் என்று பொருளா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

சீதையைப் பிரிந்த வேதனையில் இராமன் "தேன்' அருந்துவதை நிறுத்தி விட்டான் என்று "வால்மீகி' எழுதியிருப்பதாக இவர்கள் சொல்கிறார்களா?

ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. (தமிழிலும்தான்) "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அதுதான் ஸம்ஸ்க்ருத மது; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர மதுவிற்கு பால் என்றும் அர்த்தம் உண்டு; சுவையுள்ள, தித்திப்பு ருசியுள்ள பழ ரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன. "மது பானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழ ரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது. (இது சென்ற இதழ் தலையங்கத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது).

ஸீதையைப் பிரிந்ததிலிருந்து ராமர் மதுவையும் விலக்கிவிட்டார் என்றால், தேனை விலக்கினார் என்றோ, பாலை விலக்கினார் என்றோ, சுவையுள்ள பழரஸங்களை விலக்கினார் என்றோதான் அர்த்தம்; அல்லது இவை எல்லாமே மது என்பதால், இவை எல்லாவற்றையும் விலக்கிவிட்டார் என்றும் பொருள் கொள்ள முடியும்.

"மது விலக்கு சட்டம்' என்பது ஸம்ஸ்க்ருதம் அல்ல. ஆகையால் அதற்கு "தேன் விலக்கு சட்டம்' என்பது பொருளுமல்ல.

இந்த மாதிரி "தேன் விலக்கு' என்று முதல்வர் கூறுவது, பா.ம.க.விற்கு "கீ' கொடுப்பது போல ஆகிவிடும். "நாட்டில் தேன் சாப்பிட்டு நிறைய பேர் சர்க்கரை வியாதியை கடுமையாக்கிக் கொள்கிறார்கள். அதனால் "தேன் விலக்கு சட்டம்' வர வேண்டும் என்று டாக்டர் அன்புமணி கூறி, டாக்டர் ராமதாஸ் அதை ஒரு போராட்டமாக மாற்ற முனைந்துவிட்டால்...? எதற்காக கலைஞருக்கு இந்த அநாவசிய வம்பு? இவர் தமிழ்ச் சொல்லிற்கு, ஸம்ஸ்க்ருத அர்த்தம் கொடுக்கப் போக, ராமதாஸ் கூட்டணிக்குப் புதிய அர்த்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார். தேவைதானா?

கலைஞர் கூறியுள்ளபடி, என்னுடைய கருத்தை விளக்கமாகவே கூறிவிட்டேன்.



துக்ளக் தலையங்கம்

சுப்ரீம் கோர்ட் செய்த நல்ல காரியம் ! துக்ளக் தலையங்கம்

சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது. தமிழக அரசு (ஆளும் கட்சி?) நடத்தப் போவதாக, அறிவித்திருந்த "பந்த்', சுப்ரீம் கோர்ட் உத்திரவின் காரணமாகத் தடைப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தொடுத்துள்ள வழக்கின் இறுதி முடிவைப் பொறுத்து, இந்த "பந்தாளர்கள்' மீண்டும் ஏதாவது வறட்டுத் தனத்தில் இறங்குவார்களோ, என்னவோ! சுப்ரீம் கோர்ட் தடை உண்டாக்கியிருக்கிற ஆத்திரத்தைத் தணித்துக்கொள்ள, தி.மு.க.கூட்டணியினர் உண்ணாவிரதம் என்கிற பெயரில், நன்றாக "காலை டிஃபன்' உண்டு, பின்னர் சில மணி நேரம், வயிற்றுக்கு ரெஸ்ட் கொடுக்க எடுத்துள்ள முடிவு, ஒரு நல்ல தமாஷ்!

சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை வியப்புக்குரியது அல்ல; ஏனென்றால், பொதுவாகவே "பந்த்'கள் நடப்பதைப் பற்றியும், ஆளும் கட்சிகளோ, அரசுகளோ இப்படி பந்த்கள் நடத்துவது பற்றியும், நீதிமன்றங்கள் ஏற்கெனவே கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.

இப்போதோ, எந்தக் கட்சியும் "சேது ஸமுத்திரத் திட்டம் வேண்டாம்' என்று கூறவில்லை; ராமர் பாலத்தை இடித்து, இத்திட்டத்தை நிறைவேற்றாமல், மாற்று வழிகளில் ஒன்றை பயன்படுத்தி, இது முடிக்கப்பட வேண்டும் – என்றுதான் பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் கூறுகின்றன. ஆக, திட்டமே எதிர்க்கப்படுகிறது
– என்பது உண்மை அல்ல. மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டில், "ராமர் பாலத்தை இடிக்காமல், மாற்று வழிகளில் ஒன்றின் மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி ஆராய்கிறோம்' என்று வாக்குறுதி அளித்து, அதற்காக மூன்று மாத கால அவகாசத்தையும் பெற்றிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும், "ராமர் பாலம்' இடிக்கப்படுவதற்குத்தான் தடை விதித்திருக்கிறதே தவிர, திட்டத்தின் பணிகள் நடப்பதற்கு எந்தத் தடையையும் பிறப்பிக்கவில்லை. ஆக, ஸேது ஸமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாத போதே, அதற்கு எதிர்ப்பு இருப்பது போல ஒரு பாவனை செய்து கொண்டு, அரசு பந்த் நடத்த முனைந்தது. அதாவது, தேவையே இல்லாமல், காரணமே இல்லாமல், ஒரு அரசியல் ஸ்டண்ட் அடிப்பதற்காக, மக்களை ஹிம்ஸிக்க அரசும், ஆளும் கட்சியும் முடிவு செய்திருந்தன.

மத்திய அரசில் பதவிகளை வகித்துக்கொண்டே, மத்திய அரசை வற்புறுத்த ஒரு பந்த்! இத்தனைக்கும், "இந்த மத்திய அரசு, கலைஞரின் வழிகாட்டுதல்படி நடக்கிற அரசு'
– என்கிற பிரகடனம் வேறு செய்கிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசு, இந்த விஷயத்தில் தன் பேச்சைக் கேட்டு, உடனடியாக ராமர் பாலத்தை இடிக்காததால், கலைஞருக்கு வருகிற கோபத்தை, மத்திய அரசின் மீது காட்ட முடியவில்லை; மற்ற கட்சிகளின் மீது காட்டினாலும் அவர்கள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்; பார்த்தார் கலைஞர். தனது கோபத்தை மக்கள் மீது காட்டத் தீர்மானித்தார். "ராமர் பாலத்தை இடித்து சேது பாலத் திட்டம்' என்ற பெயரில், தாங்கள் விரித்த கடைக்குக் கொள்வாரில்லை – என்ற நிலை தோன்றி விடுமோ என்ற கவலையில், எல்லா கடைகளையும் ஒருநாள் அடைத்து திருப்தி காண நினைத்தது தி.மு.க.. அதுதான் இந்த கடை அடைப்பு முயற்சி.

இப்போதோ, இந்த தடை உத்திரவு வந்து விட்டது; அதுவும் அ.தி.மு.க. போட்ட வழக்கில்! இதனால் முதல்வருக்கு வரக்கூடிய ஆத்திரம் பெரிதாக இருக்கும். அதை யார் மீது காட்டப் போகிறாரோ, என்ன நடக்கப் போகிறதோ! அட, ராமா!




வேதமேதை புதுவிளக்கம் ராமரே தன்னை கடவுள் என்றதில்லை..! - ஜூவி கட்டுரை

சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.

101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்-

‘‘ராமர் பாலம் விஷயத்தை ஒரு பிரச்னையாக ஆக்கியது, நமது அரசியல்வாதிகள்தான். உண்மையில் ராமர் பாலம் என்ற பதமே தவறு. அதனை ‘ராமர் அணை’ என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால், அந்த மணல் திட்டுகள் பால வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களை சொல்லி கட்டியிருந்தால் அதற்கு ‘லோகாகிதம்’ உண்டு. அதாவது அழியாத்தன்மை உண்டு. ஆனால், ராமாயண காலத்துக்குப் பிறகு ராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், ராமாயண காலத்துக்குப் பிறகு மக்கள் அதைப் பயன்படுத்தியிருக்க வேண் டுமே... எனவே, இப்போது ‘பாலம்... பாலம்...’ என்று பிதற்றுவதில் அர்த்தமில்லை.

ராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் ‘சேது முஸ்த்ர துஸ்தாராம்... தானேத அதானாம் குரோதேன அக் ரோதம் சத்யேன அந்ருதம்...’ என ஒரு சொற்றொடர் வருகிறது. அதாவது, ‘துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு. கோபத்தை ஒழி. உண்மையைப் பேசு’ இங்கே சேது என்ற பதத்துக்கு கடந்து செல்லுதல் என பொருள்.

இந்த வகையில் ராமர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான்

சேது. இது ஒரு வினைச்சொல்... பெயர்ச்சொல் அல்ல. அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான் ‘சேதுபாலம்’ என கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்.

ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.

இதற்கு நாம் ஏன் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும்? ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார். ‘ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்’ என ராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் உள்ளேபோய்ப் பார்த்தால்... ராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால், இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்காகத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். ராமர் அக்கரை போவதற்குதானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்?

இன்னொரு செய்தி... போர் முடிந்து ராமர் திரும்பு கையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் (வில்லால்) ராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு. திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை, ராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’ என்று தெளிவாக விளக்கங்களை அடுக்கினார் தாத்தாச் சாரியார்




வால்மீகி ராமாயணம் கூறுவது என்ன ? – சோ

"ஜூனியர் விகடன்' பத்திரிகை 30.9.2007 தேதியிட்ட இதழில், ராமாயணம் பற்றி அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் கூறியுள்ள, சில கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.


ஸ்ரீ தாத்தாச்சாரியார், வயதில் மட்டுமல்ல, அறிவிலும் மிகப் பெரியவர்; ஸம்ஸ்க்ருத புலமை மிகுந்தவர்; வேதங்களை அறிந்தவர்; ஹிந்து மத சித்தாந்தங்களை நன்கு கற்றவர். இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத நான், அவருடன் மாறுபடுகிற கருத்துக்களைச் சொல்வது என்பது – நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. அவர் கூறியுள்ளவையும், அவற்றுக்கு என் மறுப்பும் இங்கே இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...போர் முடிந்து ராமர் திரும்புகையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்து விட்டதாகவும், வால்மீகி ராமாயணத்தில் வருகிறது...




மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும், ராமர் தான் கட்டிய அணையை தானே அழித்துவிட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக,
இலங்கையிலிருந்து விபீஷணன் அளித்த புஷ்பக விமானத்தில் திரும்புகையில், வானில் பறந்தவாறே, பூமியில் தாங்கள் வசித்த பஞ்சவடி, பரத்வாஜரை சந்தித்த இடம்... போன்ற பலவற்றை ராமர் ஸீதைக்குச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது, தான் (வானரர்கள் உதவியுடன்) கட்டிய அணையைச் சுட்டிக்காட்டி, "அதோ! அதுதான் நான் கட்டிய அணை! உனக்காக, ஸமுத்திரத்தின் மீது நான் நிர்மாணித்தது இது' – என்று கூறுகிறார்.

அதாவது, ராமர் அயோத்தி திரும்பிய போதும், அந்த அணை அப்படியேதான்
இருந்தது. அவராலோ, வேறு யாராலோ அழிக்கப்படவில்லை.




அதுமட்டுமல்ல. "இந்த மாபெரும் கடலின் கரையில்தான், அணை கட்டுவதற்கு முன் மஹாதேவன் எனக்கு அருள்புரிந்தான். இது "ஸேதுபந்தம்' என்று பெயர் பெற்று,
மூவுலகிலும் வணங்கப்படும். இந்த இடம் புனிதமானதாகவும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் கருதப்படும்' – என்று ராமர், ஸீதையிடம் சொன்னார்.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ..."ராமர் பாலம்' என்று சொல்வதே தவறு. "ராமர் அணை' என்று வேண்டுமானால் சொல்லலாம்... "சேது' என்ற சொல்லுக்கு "கடந்து செல்வது' என்று பொருள். ராமர் கடலைக் கடந்து சென்ற நிகழ்வுக்குப் பெயர்தான் சேது. இது ஒரு வினைச்சொல். பெயர்ச்சொல் அல்ல...

மறுப்பு : ஸம்ஸ்க்ருத அகராதிகளில் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அவ்வாறே அதற்குப் பொருளும் கூறப்பட்டிருக்கிறது.




"ஸேது' என்பதற்கு "அணை' என்ற பொருள்; மற்றும் "பாலம்' என்கிற பொருள்; மேலும் சில அர்த்தங்கள் – அகராதிகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால் "கடப்பது' என்ற அர்த்தம் கூறப்படவில்லை.

தவிர, வால்மீகி ராமாயணத்தில் "ஸேது:' (ஸேதுஹு என்று படிக்க வேண்டும்) என்று வருகிறது. வினைச்சொல் "ஸேது:' என்று வராது. ஆகையால் "ஸேது' ஒரு பெயர்ச்சொல்லே. (ஸாம வேதத்தில், அது எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை சரிபார்த்துக் கூற என்னால் முடியவில்லை.)

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...மணல் மற்றும் கற்களைப் போட்டு, அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தரப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக, வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான்
"சேது பாலம்' என கதைகட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்....




மறுப்பு : வால்மீகி ராமாயணத்தில் "தடுப்புகள்' ஏற்படுத்தப்பட்டன என்றோ, அவற்றை வானர சேனை தாண்டித் தாண்டி சென்றன என்றோ கூறப்படவில்லை.

அணை – பாலம் கட்டப்பட்டதையும், கடலை, வானர சேனை கடந்ததையும் வால்மீகி ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது :

"பல்லாயிரக்கணக்கான வானரர்கள், பாறைகளைப் பெயர்த்து, மரங்களைப் பிடுங்கி, கடற்கரைக்கு கொண்டு வந்தனர். (மரங்களின் பெயர்களும் தரப்பட்டிருக்கின்றன). பெரிய பாறைகள் கொண்டு வரப்பட்டன... பாறைகளை சமுத்திரத்தில் போட்டு, (அவை நேராக இருக்க) கயிறுகள் பயன்படுத்தப்பட்டன... (ஒவ்வொரு தினமும் எவ்வளவு தூரம் பாலம் கட்டப்பட்டது என்பது விளக்கப்படுகிறது)... இவ்வாறு, வானத்தில் தெரிகின்ற நக்ஷத்திர மண்டலம் போல், அந்த சமுத்திரத்தின் நடுவே
காட்சியளித்த, அந்த உன்னதமான பாலத்தை (அணையை), நளன் கட்டினான். வானத்திலிருந்து சித்தர்களும், ரிஷிகளும் இந்த அதிசயத்தைப் பார்வையிட்டனர். பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் உடைய அந்தப் பாலத்தைக் கண்டு தேவர்களும், கந்தர்வர்களும் பிரமித்தனர். நன்கு கட்டப்பட்ட, மிகச் சிறப்பான, ஸ்திரமான அந்த அணை, வகிடு எடுக்கப்பட்ட ஒரு பெண்மணியின் கேசம் போல காட்சியளித்தது...!




இவ்வாறு, வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிற அணையை, அல்லது பாலத்தை
– "மண்ணையும் கல்லையும் போட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது' என்று கூறுவது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது.

வால்மீகி ராமாயணத்தில் மேலும் "...ஸுக்ரீவனுடன், ராமர் வானர ஸேனைக்கு தலைமை வகித்து முன் சென்றார் (ஹனுமார் அவரைத் தாங்கிச் செல்ல வேண்டுமென்று ஸுக்ரீவன் கேட்டுக் கொண்டான்) சில வானரர்கள், பாலத்தின் நடுவில் நடந்தனர்;
சிலர் பாலத்தின் இருபுறங்களில் நடந்தனர்; சிலர் தண்ணீரிலியே கூட நீந்தினர்... கடலின் மறு கரையிலிருந்து, நளன் கட்டிய பாலத்தின் மூலம் இலங்கையை அடைந்த வானர ஸேனைகள் அங்கே முகாமிட ஸுக்ரீவன் ஆணையிட்டான்...'

இவ்வாறு வால்மீகி கூறியுள்ளபோது, ஏதோ மணல் "திட்டுகளை தாண்டித் தாண்டி' மறு கரை அடையப்பட்டது என்று சொல்வதும், வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானதே.




ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது. ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார் : "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்' – அதாவது "நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்' என ராமர் தன் உரையில் சொல்வதாக, வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது....

மறுப்பு : இந்த மேற்கோள் அரைகுறையாகவும், தவறாகவும் இருக்கிறது. ஸீதை அக்னி பிரவேசம் செய்கிறபோது, தேவர்கள் ராமர் முன்தோன்றி, "தெய்வங்களில் முதன்மை படைத்தவன் நீ, என்பதை நீ உணராமற் போவது எப்படி? படைப்பின் தொடக்கத்திலும், இடையிலும், முடிவிலும், இருக்கிறவனல்லவா நீ? மனிதன் போல நடந்துகொண்டு ஸீதையை அலட்சியம் செய்கிறாயே?' என்று கேட்கின்றனர்.




அதற்கு ராமர் கூறுகிற பதிலில் பாதியை மேற்கோள் காட்டி, அர்த்தம் கூறுகையில், கொஞ்சம் தானாக சேர்த்துக் கூறியிருக்கிறார் பெரியவர். அந்த ஸ்லோகம் இவ்வாறு அமைந்திருக்கிறது:

ஆத்மானம் மானுஷம் மன்யே
ராமம் தசரதாத்மஜம்/
ஸோஹம் யஸ்ச யாதஸ்ச
பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே//

இதன் பொருள் : தசரதனின் மகன், ராமன் என்கிற மனிதன், என்றே என்னை நான் கருதுகிறேன். மேன்மை வாய்ந்த பகவான் (பிரம்மதேவன்) நான் யார், எங்கிருந்து
வந்தவன் என்பதைக் கூறுவாராக'...

அதாவது, "என்னைப் போற்றாதீர்கள்' என்றும் ராமர் கூறவில்லை; "நான் தெய்வமெல்லாம் கிடையாது' என்றும் கூறவில்லை. "நான் யார் என்பதை பிரம்மதேவன் விளக்குவாராக' – என்றுதான் சொல்கிறார். அப்போது பிரம்மதேவன், பலவித போற்றுதல்களைக் கூறுகிறார். "நீயே நாராயணன். நீயே கார்த்திகேயன். அறிவு, பலம், பொறுமை, அனைத்தும் நீயே. எல்லாவற்றின் தொடக்கமும் நீயே. முடிவும் நீயே. நீயே விஷ்ணு. நீ, மஹாவிஷ்ணு; ஸீதை, மஹா லக்ஷ்மி...' பிரம்மதேவன் கூறுகிற துதி நீண்டது; அது புகழ்பெற்ற துதி.

இவ்வாறு பிரம்மதேவன் கூறுவதை ராமர் மறுத்து, "என்னைப் போற்றாதீர்கள்' என்று கூறவில்லை. அப்படிச் சொல்வது வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பானது. இந்த துதிக்குப் பின்னால்தான், ஸீதையை ஏந்தி அக்னிதேவன் தோன்றினான்.

இதைத் தவிர, விஷ்ணுவே, ராமராக அவதரித்தார் என்பதும், வால்மீகி ராமாயணத்திலேயே மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ராமர் தெய்வமல்ல என்பது, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்து.

ராமாவதாரம், மனித அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து, தனது அவதார காலத்தை முடிப்பதே விஷ்ணுவின் நோக்கம். அதனால்தான், ராமர் "நானே தெய்வம்' என்று கூறிக்கொள்ளவில்லை.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர், "நான் ஒரு சாதாரண தொண்டன்' என்று சொல்லிக் கொண்டாலும், அவரை தொண்டனாக நடத்தாமல், தலைவனாகவே நடத்துகிற "பண்பு' உள்ள தேசத்தில் – "ராமர் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளவில்லையே?' என்ற கேள்வி, அநாவசியமானது.

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...ராமர் அக்கரை போவதற்காகத்தானே கட்டினார்.
வணங்குவதற்காகவா கட்டினார்?....

மறுப்பு : இப்படி எல்லா நம்பிக்கைகளைப் பற்றியும் கேள்வி கேட்கலாம். அது ஒன்றும் பெரிய காரியமல்ல. "சாவதற்காகத்தானே ஏசுவை சிலுவையில்
அரைந்தார்கள். சிலுவையைக் கும்பிடுவதற்காகவா?' என்று கேட்கலாம். ஏசு பிரானின் தெய்வீகத் தன்மையை ஏற்காதவர்கள், இப்படிப் பேசலாம்.


"நபிகள் தலையில் முடி வைத்துக் கொண்டது, வழக்கப்படியானதுதானே?
வணங்குவதற்காகவா முடி வைத்துக் கொண்டார்?' என்றும் கேட்கலாம்
– இறைத்தூதரான நபிகள் நாயகம் பற்றி அலட்சியமாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்!

ராமர் கடலைக் கடப்பதற்கு சமுத்திரத்தில் பாலம் அமைத்த அரிய சாதனையை, தேவர்களே புகழ்ந்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த உணர்வை வணங்குவதற்கு மேல், பக்தியுடையவர்கள் செய்யக் கூடியது என்ன?

ஸ்ரீ தாத்தாச்சார்யர் : ...(ஸ்ரீராமர்) திரும்புகிறபோது, விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை ராமர் இலங்கைக்குப் போவதற்கும், ஏதாவது விமானம் இருந்திருந்தால், இந்தப் பிரச்சனையே வந்திருக்காது....




மறுப்பு : ஏன்? ராவணன் ஸீதையை அபகரித்துச் செல்லாமல் இருந்திருந்தாலும்,
இந்தப் பாலம் பற்றிய பிரச்சனையே வந்திருக்காதே? அதைக் குறிப்பிட்டால், ராவணனின் தீய குணத்தை நியாயப்படுத்துவது போல இருக்கும் என்று அதுவிடப்பட்டு, அதற்குப் பதிலாக "ராமருக்கு இலங்கை செல்ல விமானம்
இருந்திருந்தால்...' என்பது மட்டும் குறிப்பிடப்படுகிறதா?

"ராமரே அழிக்க முடிவு பண்ணியதை, நாம் வீண் நம்பிக்கையில் போற்றி...' என்றும் அக்னிஹோத்ரம் தாத்தாச்சார்யர், தனது கருத்துக்களின் முடிவாகக் கூறியிருக்கிறார்.

நாமும் முடிவாகச் சொல்கிறோம் – ராமர், ஸேதுவை – அணையை – பாலத்தை
– அழிக்க நினைக்கவும் இல்லை, முடிவுசெய்யவும் இல்லை, முனையவும் இல்லை. அதற்கு மாறாக ஸீதையிடம் அந்த பாலத்தைக் காட்டி, அதன்மூலம் ஸமுத்திரத்தைக் கடந்ததையும் கூறி மகிழ்கிறார். அந்த இடத்தில் சமுத்திரக் கரையையும் கூட, புனிதமானது என்றும், பாவங்களை அழிக்க வல்லதாகவும் திகழும் என்றும் ராமர் கூறுகிறார். இது வால்மீகி ராமாயணத்திலேயே கூறப்பட்டிருப்பது.

ஆக, ராமர் பற்றி ஸ்ரீ தாத்தாச்சார்யர் கூறியுள்ளவை, வால்மீகி ராமாயணத்திற்கு புறம்பான கருத்துக்களே ஒழிய, அதை ஒட்டிய கருத்துக்கள் அல்ல.

"சன்" என்ற ஆக்டோபஸ் - ஒரு பார்வை

தொலைக்காட்சி மீடியா திரையுலகம் என்று அனைத்தையும் ஒரு சேர கலக்கிக்கொண்டு இருப்பது என்றால் அனைவருக்கும் தெரியும் அது சன் தொலைகாட்சி தான் என்பது. அரசியல் பலமும் திறமையும் ஒரே சேர இருந்தால் எப்படி அனைத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர்களே சிறந்த உதாரணம்.


தூர்தர்சனை மட்டுமே வறட்சியாக பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் வண்ணமயமாக சன் தொலைக்காட்சியை தொடங்கிய போது சந்தோசப்படாதவர்களே இல்லை எனலாம்.

வாரம் ஒரு முறை ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், சித்ரகார், ஞாயிற்று கிழமை ஒரு ஆதி காலத்து படம், மனைமாட்சி, ஞாயிறு மாலை ஸ்பைடர் மேன், எதிரொலி, சித்ரமாலா, ரங்கோலி என்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு சாதா சாப்பாடே எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு அதுவும் விதவிதமாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அந்த நிலை சன் தொலைக்காட்சி வந்த போது ஏற்பட்டது.

சன் தொலைக்காட்சி ஆரம்பமே அதகளமாக இருந்தது மக்களை கவர திரைப்படம் தான் முக்கிய காரணி என்பதை சரியாக உணர்ந்து அது சம்பந்தமாக அதிக நிகழ்ச்சிகளை வைத்தார்கள் (இருந்தாலும் தற்போது உள்ள அளவு இல்லை) முதலில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பு துவங்கும், அப்போது கூறியது தான் சன் தொலைக்காட்சியின் தமிழ்மாலை (மீதி நேரங்களில் திரை பாடல்கள் ஒலிபரப்பாகும்) மக்களின் தாறுமாறான வரவேற்பால் விரைவிலேயே 24 மணி நேரமாக்கினார்கள்.


கலாநிதி மாறன் மிகச்சிறந்த மார்கெட்டிங் நபர், மக்கள் எப்படி கூறினால் எதை கூறினால் ரசிப்பார்கள் என்பதை விரல் நுனியில் வைத்து இருப்பவர். இதனால் அடுத்தடுத்து பல புதிய வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுத்தார்கள் இதில் அப்போது ஜோடி பொருத்தம், பெப்சி உங்கள் சாய்ஸ் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தூர்தர்சனின் வறட்சியான செய்திகளையே பார்த்து இருந்தவர்களுக்கு சன் தொலைக்காட்சி யின் செய்திகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதற்கு இன்னொமொரு முக்கிய காரணம் அவர்களுக்கு கிடைத்த தொகுப்பாளர்கள் MJ ரெகோ, பெப்சி உமா உட்பட பலர். இவ்வாறு தொகுப்பாளர்கள் தேர்விலும் அவர்களை தங்கள் வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி அவர்களின் முழு திறமையையும் பயன்படுத்திக்கொண்டார்கள். இது குறிப்பிடத்தக்க ஒன்று.

சிறந்த நடிகராக இருந்தாலும் இயக்குனர் சரி இல்லை என்றால் அவரது திறமைகள் முழுவதும் வீணடிக்கப்பட்டு விடும் என்பது போல இவர்களிடம் இருந்து மற்ற இடத்திற்கு சென்ற போது அவர்களால் அந்த அளவு ஜொலிக்க முடியவில்லை என்பதும் உண்மை. ஒருவரிடம் உள்ள திறமையை முழுவதும் பயன்படுத்துவதில் கலாநிதி மாறன் ஒரு சிறந்த நிர்வாகி. கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் பொதுமக்களை அதிகளவில் ஈர்த்தது, பெரும்பாலான வீடுகளில் சன் தொலைக்காட்சி முதல் சேனலாக தான் இருக்கும், கவனித்து பார்ப்பவர்களுக்கு தெரியும்.


தங்கள் தொழிலை சன் தொலைக்காட்சி யுடன் நிறுத்திக்கொள்ளாமல் பல சேனல்களை துவங்கினார்கள், இதில் அடுத்த மாநில சேனல்களும் அடங்கும். கலைஞர் ஆட்சியில் இருந்த போது அதிகார பலமும் உடன் இருந்ததால் அவர்களால் இன்னும் பல விஷயங்கள் எளிதாக சாதித்துக்கொள்ள முடிந்தது. மற்ற தொலைக்காட்சிகளுக்கு நெருக்கடி தரப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட விஜய் தொலைக்காட்சி செய்திகள் இதனால் நிறுத்தப்பட்டது, அந்த சமயத்தில் பலரால் விரும்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி செய்தி.

அரசியல் பலம் மட்டுமே ஒருத்தரை உயர்த்தி விட்டு விடாது என்பதற்கும் இவர்களே உதாரணம், காரணம் ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு என்ன முயற்சித்தும் சன் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை, நெருக்கடி கொடுத்தாலும் அவர்கள் அதை வேறு மாதிரி சமாளித்து தடையை தாண்டி கொண்டே இருந்தார்கள். பலம் இருந்தும் ஜெயா தொலைக்காட்சியால் சன் தொலைக்காட்சியை மிஞ்ச முடியவில்லை.


திரைப்படங்கள் மட்டும் பத்தாது பெண்களை கவர சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்கள், அது பெரிய வெற்றி பெற்றது. பெண்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு கொடுத்தனர். முன்பு இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சீரியல் வரும் பின் அது அதிகமாகி காலை மாலை என்று பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமித்து விட்டது. வெறும் சீரியல் மட்டுமே இருந்தால் மற்ற பார்வையாளர்களை இழந்து விடுவோம் என்று அவர்கள் துவங்கியது தான் சன் மூவீஸ் (தற்போது இல்லை, அது K தொலைக்காட்சி யாக மறு அவதாரம் எடுத்து இருக்கிறது), சன் மியூசிக். இதில் சுமங்கலி கேபிள் விஷனும் அடங்கும்.

கடந்த முறை தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி ஏற்ற போது அவர்கள் ஆதிக்கம் ரொம்ப அதிகரித்தது. தாங்கள் வளர்ச்சி பெற அரசியல் பலத்தை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். விஜய் தொலைக்காட்சி நமக்கு எதுக்கு வம்பு என்று முற்றிலும் ஒதுங்கி விட்டார்கள். ராஜ் தொலைக்காட்சி மண்டை காய்ந்து விட்டது.

தொழில் துறையில் பல சாதனைகளை புரிந்த டாட்டா அவர்களையே மிரட்டியதாகவும் தயாநிதி மாறன் மீது குற்ற சாட்டு உண்டு. தயாநிதி மாறனும் அண்ணனுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல, தொழில் நுட்ப துறை மட்டுமல்ல எந்த துறை கொடுத்தாலும் அதில் தனித்து தெரிவார் என்பதற்கு தற்போது ஜவுளி துறையையே எடுத்துக்காட்டாக கூறலாம். இப்படி ஒரு துறை இருப்பதையே பலர் தற்போது தான் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.

இவர்கள், பலரை தங்கள் அதிகாரத்தால் அடக்கியது பலருக்கு தெரியும், மார்க்கெட்டிங்கில் இவர்களை யாரும் மிஞ்ச முடியவில்லை. எடுத்துக்காட்டாக 1996 சட்டசபை தேர்தலில் கலைஞர் அரசு பெரும் வெற்றி பெற இவர்கள் சன் தொலைக்காட்சி ஒரு காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. சன் தொலைக்காட்சி பிரச்சாரம் மக்களை எளிதாக கவர்ந்தது, ஜெயா தொலைக்காட்சிக்கு அந்தளவு மக்களை கவரும் படி செய்தியை சொல்ல தெரியவில்லை.

இந்நிலையில் தினகரன் கருத்துக்கணிப்பு!!! ஒன்று நடத்தி அழகிரியை கடுப்படிக்க தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டது. இது இரு குடும்பத்திற்கும் பெரிய சண்டையை ஏற்படுத்தி விட்டது. இதனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தோசப்பட்டார்கள், நீண்ட வருடங்களுக்கு பிறகு நடு நிலையான சன் செய்தியை பார்த்தார்கள். ஜெ வைகோ விஜயகாந்த் செய்திகளும் அடிக்கடி காட்டப்பட்டன.


இடைப்பட்ட காலத்தில் கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது, சன் தொலைக்காட்சி அலுவலகம் அறிவாலயத்தில் இருந்து மாற்றப்பட்டது. சன் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு இழுக்கப்பட்டார்கள், சன் தொலைக்காட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. சன் தொலைக்காட்சி தான் அனைத்து புது படங்களையும் வாங்கி கொண்டு இருந்தது, தற்போது கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதால் அனைத்து பட உரிமையும் கலைஞர் தொலைக்காட்சிக்கு போனது குசேலன் தசாவதாரம் மற்றும் பல படங்களை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியது. இந்த கடுப்பில் குசேலனை சன் தொலைக்காட்சி ஒரு வழி ஆக்கியது தனிக்கதை.

சன் தொலைக்காட்சிக்கு படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மேலும் கடுப்பானது, இவர்களின் முக்கிய பலமே படங்கள் என்பதால் அடி மடியிலே கை வைத்ததால் இதை தாண்ட அவர்கள் எடுத்த அடுத்த முயற்சி தான் படங்களை வாங்குவது. இதை கலைஞர் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் முதன் முதலில் வாங்கி வெளியிட்ட "காதலில் விழுந்தேன்" படம் இவர்கள் செய்த விளம்பரத்தால் வெற்றி பெற விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் மிகவும் சந்தோசப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் வாங்கும் படத்தின் அளவு அதிகரித்தது, தயாரிப்பாளர்களும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வரை சரி என்று விற்று விட ஆரம்பித்து விட்டார்கள். நாம் எல்லாம் இப்போது இவர்கள் செய்யும் பட விளம்பரத்தால் நொந்து நூடுல்ஸ் ஆவதற்கு முக்கிய காரணம் கலைஞர் தொலைக்காட்சி தான் :-))))

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல இவர்கள் ராஜ் தொலைக்காட்சிக்கு செய்த பிரச்சனை எப்படியோ அது போல சன் தொலைக்காட்சி தெரியாமல் இருக்க செய்யப்பட்டது. இது செய்திகளில் முக்கிய விவாதமாக வந்தது. இவர்களுடைய சுமங்கலி கேபிள் விஷனுக்கு நெருக்கடி கொடுக்க அரசு கேபிள் கொண்டு வரப்பட்டது. இதை சமாளிக்க இவர்கள் கொண்டு வந்தது தான் சன் DTH அதுவும் இவர்கள் மார்க்கெட்டிங் தந்திரத்தால் வெற்றி பெற்றது.


நான் இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன்... எனக்கு சன் தொலைக்காட்சி மீது வேறுபட்ட கருத்துக்கள் உண்டு அதே போல இவர்கள் செய்யும் அதிகார துஸ்பிரயோகம் ஏற்று கொள்ள முடியாத ஒன்று, ஆனால் இவர்கள் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தங்களுக்கு வந்த ஒவ்வொரு தடைக்கல்லையும் சோர்ந்து போகாமல் படிக்கல்லாக மாற்றிக்காட்டியது எனக்கு ஒரு முன்மாதிரி மற்றும் மிக ஆச்சர்யம்.

பிறகு சன் தொலைக்காட்சி தன் முழு பலத்தை உபயோகித்து கலைஞர் அரசு செய்திகளை எந்த ஒளிவு மறைவில்லாமல் காண்பித்தது, இவை எல்லாவற்றையும் விட ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது. தேர்தல் வேறு வந்ததால் வேறு வழி இல்லாமல் மேலும் பிரச்சனை வளர்க்க விரும்பாமல் கலைஞர் இரு குடும்பத்தையும் சேர்த்து வைத்து தான் அரசியல் சாணக்கியர் என்பதை நிரூபித்தார்.

தற்போது தங்களை நிலை நிறுத்த மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் விளம்பரத்தில் நடுநிலையான விமர்சனம் என்று கூறுகிறார்கள் இவர்கள் படமே எப்போதும் முதல் இரண்டாம் இடங்களை பிடிக்கிறது அது மொக்கையாக இருந்தாலும். செய்திகளில் கூட தங்கள் பட விளம்பரத்தை முக்கிய செய்தியாக கூறுவது, மீடியா முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பது செய்திகளில் (தினகரன் குங்குமம் தமிழ் முரசு வானொலி) இவர்களே வியாபித்து இருக்கிறார்கள். இதனால் மக்கள் இவர்கள் சொல்வதே செய்திகள் என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். இது தவறான போக்கு. ஒருவர் கையிலே அதி முக்கியமான மீடியா இருப்பது எவருக்கும் நல்லதல்ல.

சன் குழுமம் தற்போது தாங்கள் தான் எல்லாமும் நம்மை அசைக்க முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை அவர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலகத்தையே தன் விண்டோஸ் மென்பொருளால் கட்டுப்படுத்தி வைத்து இருந்த ஆனானப்பட்ட பில் கேட்ஸ் அவர்களே ஆடி போய் இருப்பதே இதற்க்கு சரியான உதாரணம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.

positive

ரசிக்க மட்டுமல்ல











வலி

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!

நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!

*

பிறந்த
குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!

*

கடல்
கடந்து
பார்க்க
வந்திருக்கின்றன
சோறு வைத்த
காக்கைகள்!

*
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

ஆழிப்
பேரலைகளும்
எங்கள்
பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப் போய்
கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்!

*

இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்!

நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம்!

*
வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்!
இல்லறம்
எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்

*
அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்!
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை

*

பஞ்சம்
பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறீர்கள்!
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்

*

தமிழில்தான்
விசாரித்தார்கள்
தமிழர்களாய்
இல்லை

*

மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை!
"தமிழர்சதுக்கம்."

*

அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்!
இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்

*

தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்!
தப்பித்தவர்கள்
'ஏன்?'களுக்கு
இரையானோம்

*

எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது!
உங்களால்
இரங்கி
வந்து
உரையாடமுடியவில்லை!

*

இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.

*

நேற்று
வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்!

*

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது...
‘யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!’

நன்றி : அறிவுமதி



தபு ஷங்கர் கவிதைகள்

வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.



வைரமுத்து கவிதைகள்

1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி


2. காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.


3. சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!


4. சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்


5. தேசிய காலம்
சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?


6 .திராவிட காலம் - 1
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?


7. திராவிட காலம் -2
விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது? விடையாட வேண்டும் வாடி என் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே


8. புதுக்கவிதைக் காலம் -1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை


9. புதுக்கவிதைக் காலம் - 2
உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்


-
வைரமுத்து

நகைச்சுவை

என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண் டு இருக்க முடியாது.

உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?

நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத் தை விட்டு ஓடிடுவேன்.

இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு

ஆமா சரியா சொன்னீங்க...

தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!

ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?

சீத்தோட்ல மூன்று குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரே ரட்டுல 3 குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். பெருந்துறையில் 6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரே இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.

மாப்பிள்ளை ஆட்டோ டிரைவர்னு
எப்படி கண்டுபிடிச்சீங்க ?'

'வரதட்சணைக்கு மேல ஐந்து ருபாய் போட்டுக்
கொடுங்கன்னு கேட்கிறாரே....!'

உங்களுக்கு தலைவளி இருக்கா ?

இருக்கு டாக்டர் ! வெளியேதான் வெயிட் பன்றா !

----------------------------------------------------------------------------------------------------------------
மேடையில தலைவர் இப்படிப் பேசியிருக்க கூடாது.....

என்ன பேசினார் ?

தலைக்கு ஐம்பது வாங்கிக் கொண்டு லாரியில் ஏறி வந்திருக்கும்
ஜால்ராக்களேன்னு சொல்லிட்டாரு......

-----------------------------------------------------------------------------------------------------------------------
விஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......








1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்




2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?




3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.




4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்






5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
-
-
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)




6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?




7.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்




8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.




9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.




10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......




11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லல