வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

உன் கணவன்

இரவு
முழுக்க
அமர்ந்து இருந்தேன்
உன்
நினைவு
மரத்தடியில்
அது எனக்கு
போதி
எவ்வளவு
அழகாய்
கைகளை
பிடித்தாய்
இன்னும் மணக்கிறது
உன் வாசம்
பட்டாம்பூச்சி
பிடித்த
கைகளில்
ஒட்டும்
வண்ணம் போல்
உன்
வார்த்தைகள்
இன்னும் காற்றிலே
என்னவெல்லாம்
கனா கண்டேன்
நீயும்
நானும்
இதில்
எதாவது
செய்திருப்பனா
உன் கணவன்

_________________________

வெறும் கரங்களோடு

வெறும்
கரங்களோடு
திரும்புகிறேன்
ஏதோ
ஒன்றின்
ஞாபக
மறதியாய்
மீண்டும்
நினைவில்லா
அந்த
நினைவுகள்
என்னுள்
வெறுமை
நிரம்புகிறது
நீரற்ற
மீனை
போல்
பரிதவிக்கிறது
நம்பிக்கை
வாழ்வின்
மூடப்பட்ட
கதவுகளில்
மோதி
கலைத்து போகிறேன்
இருந்தும்
காத்து
கை கொடுக்க்ப்பது
தெய்வமோ
எதோ ஒன்று
என்னை
கரையில்
சேர்க்கிறது

______________

வார்த்தை

மௌன
தவமிருந்தேன்
வார்த்தை வரம் பெற
வறண்ட
நிலம் நிரம்பும்
மழையென
நிரம்பி
வழிகிறேன்
உன்
சொற்களின்
அன்பில்
சொற்களை
நீ
கவனமாக
கையாளுகிறாய்
மேலும்
கவனமாக
கையாள்கிறது
உன்
சொற்கள்
எனை
சமயத்தில் மலர்களென
சமயத்தில் சுடரென
ஒளிர்ந்தும் மலர்ந்தும் வெளிப்படுகிறது
உன் சொற்கள்
கடல் கொண்ட
உயிர்களென
உன் சொற்கள்
சமயங்களில்
கொள்கிறது
தாய் பறவையின்
சிறகை போல
அடைகாக்கிறது
சமயங்களில்
ஏதாயினும்
உன் வார்த்தைகள்
எனக்கு வரமே
நம்மால்
வார்த்தைகள் வாழ்கிறது
வார்த்தையால்
நாம் வாழ்கிறோம்
_______________________________________________

என் செல்ல தேவதைக்கு


சாபங்களின்
துயர் பாலையில்
உனது
வார்த்தைகள்
வரமென
நனைத்தது
உயிரின் ஆழத்தை
உனது
சிறு விரல்களின்
ஸ்பரிசத்தில்
சாப தழும்புகள்
மறைந்து
வண்ண மலர்களென
நிறைந்து கிடக்கிறேன்
வழி
தொலைந்த
வனத்தில்
எவருமின்றி
திரிந்த போது
விரல் பிடித்து
அழைத்து செல்கிறாய்
ஒளி தேசம் நோக்கி
நினைவில் கொள்
உனது கரங்கள்
பற்றியது
எனது விரல்துளி
மட்டுமல்ல
உயிர் துளியும்
கூட