வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நன்றி தோழி

வாழ்வின்
துயர்
மழைகளில்
குடையாகிறது
உன் நடப்பு

இலக்கியத்தில்
பெண்களுக்கு
பருவத்திற்கு
ஒரு பெயர்
நட்ப்பிர்க்கு
ஒரே பெயர்

வாழ்வின்
சரிவுகளில்
கை கொடுக்கிறது
உன் வார்த்தைகள்

உன்
நட்பின் மூலம்
கைபிடித்து
அழைத்து
செல்கிறாய்
நம்பிக்கை
தேசத்திற்கு

ஓயாமல்
நகரும் வாழ்வில்
உன் நட்ப்பே
இளைப்பாறுதல்

ஒரு
வேளை
நாம் பிரியலாம்
ஆனால் உன்
பெயரை
கேட்கும் பொழுதில்
மலர்ந்து விடுகிறது
நட்பின் மலர்
நன்றி இறைவா
சாபம் கொடுத்தே
பழக்கப்பட்ட
நீ கொடுத்த
வரம் இந்த தோழி
இந்த நட்ப்பு

ஒரு மலர் விருட்சம்

ஒரு
மலர் விருட்சம்
கொள்ளை
கடை பகுதியில்

பிரபஞ்சத்தின்
பரபரப்பு
அற்ற தனி
சூழலில்

மண்ணில்
விழுந்த
விதைக்கு
மலர்களை
பரிசாய் தந்து
கொண்டிருந்த
விருட்சம்

அசாதரணத்தில்
அங்கே
சென்ற போது
வார்த்தையை
காட்டிலும்
சிறிய பறவைகள்
மலர்களில்
முத்தம்
பதித்து கொண்டிருந்தது
தன்
உதிர்ந்த
மலர்கள்
புடைசூழ
விருட்சம்
நின்றது ஒரு
அழகிய கனவென

சுழல
தொடங்கியது
பிரபஞ்சம்
விருட்சதினை
அச்சாய் கொண்டு



ஊர் குருவிகள்

இப்போதெல்லாம்
ஊர் குருவிகள்
காண
கிடைப்பதில்லை

மரங்களோடு
மனதையும்
அழித்த
மனிதர்களோடு
வாழ
பிடிக்கவில்லை போல

மரம்
அற்றுப்போனதால்
கூகுளில் கூடு
கட்டி இருக்கலாம்

கைபேசி
கோபுரங்களின்
நிறைந்த
அலைவரிசையில்
விஷம் கக்கும்
வார்த்தைகளால்
அருகி இருக்கலாம்

உயிரற்ற
மின்வடங்களுகாய்
உயிரை தரும்
மரம்
அழிப்பவர் ஆயிற்றே
நாம்

இது
தொலைந்ததில்
வருத்தம் தான்
ஆனாலும் பெரும்
கவலை
நாளை இவர்கள்
இந்த
பூமிபந்தை
தொலைத்து
விட கூடாதே

மூன்று ஜென் கவிதைகள்

என்னுள்
தேடுகிறேன்
இல்லை கிடைக்கும்
வரை

தேநீர்
தொண்டையில்
இறங்குகிறது
நிகழ் காலம்

தூக்கி
எறிந்துவிட்டேன்
தேவையில்லை
மனது

கடல்வெளியாய் நீ

உன்
கரைகளில்
நின்று உடைந்த
என்னை
பொறுக்குகிறேன்
கிளிஞ்சல்கள் பொறுக்கும்
சிறுமியென
உன்
வார்த்தைகள்
மேலும்
அலைகழிக்கும்
உக்கிரம் நிறைந்த
அலைகலேன
என்
கனவினால்
கட்டும்
மணல் வீடுகளை
கலைத்து
இன்பம் கொள்கிறாய்
இறுதியாய்
உன் முன்
மண்டியிட்டு
கேட்பது
என் உயிரை
எடுத்து கொண்டு
உடலை
வீசி விடாதே
உன் கரைகளில்
அநாதை
பிணமாய்

_________________