வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மௌனமாய்


ஒரு
மன்னிப்பை
தயையை
எதிர்நோக்கி
காத்திருக்கும்
தருணமொன்றில்
அறைந்து சாத்தப்படும்
கதவும்
விடை தாராத
மௌனமும்
எதிர்கொண்ட அக்கணங்களை
எந்த சொற்கள்
மொழி பெயர்க்க கூடும்
மௌனமாய்
உடைந்து வெளியேறும்
கண்ணீர் மட்டுமே
உணர்த்தும்
அந்த ரணங்களை
பரிதவிப்பின்
சொல்லொணா துயரின்
உச்சமல்லவா அவை

No comments:

Post a Comment