வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

என் செல்ல தேவதைக்கு


சாபங்களின்
துயர் பாலையில்
உனது
வார்த்தைகள்
வரமென
நனைத்தது
உயிரின் ஆழத்தை
உனது
சிறு விரல்களின்
ஸ்பரிசத்தில்
சாப தழும்புகள்
மறைந்து
வண்ண மலர்களென
நிறைந்து கிடக்கிறேன்
வழி
தொலைந்த
வனத்தில்
எவருமின்றி
திரிந்த போது
விரல் பிடித்து
அழைத்து செல்கிறாய்
ஒளி தேசம் நோக்கி
நினைவில் கொள்
உனது கரங்கள்
பற்றியது
எனது விரல்துளி
மட்டுமல்ல
உயிர் துளியும்
கூட

No comments:

Post a Comment