வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வார்த்தை

மௌன
தவமிருந்தேன்
வார்த்தை வரம் பெற
வறண்ட
நிலம் நிரம்பும்
மழையென
நிரம்பி
வழிகிறேன்
உன்
சொற்களின்
அன்பில்
சொற்களை
நீ
கவனமாக
கையாளுகிறாய்
மேலும்
கவனமாக
கையாள்கிறது
உன்
சொற்கள்
எனை
சமயத்தில் மலர்களென
சமயத்தில் சுடரென
ஒளிர்ந்தும் மலர்ந்தும் வெளிப்படுகிறது
உன் சொற்கள்
கடல் கொண்ட
உயிர்களென
உன் சொற்கள்
சமயங்களில்
கொள்கிறது
தாய் பறவையின்
சிறகை போல
அடைகாக்கிறது
சமயங்களில்
ஏதாயினும்
உன் வார்த்தைகள்
எனக்கு வரமே
நம்மால்
வார்த்தைகள் வாழ்கிறது
வார்த்தையால்
நாம் வாழ்கிறோம்
_______________________________________________

No comments:

Post a Comment