வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

உறக்கம் கலைந்த இரவு


எவருமற்ற
வீதியெங்கும்
வெளிச்ச எச்சில்
துப்பி நிற்கிறது
தெருவிளக்கு
காற்றின்
கதைப்பில்
அசைந்து
சிரிக்கிறது
வரிசையாய் மரங்கள்
தாமதமாய்
வீடு

திரும்புவனின்
வாகனசப்தம்
நிசப்தத்தின்
திரைகளை
கிழித்து எரிகிறது
திசைகள்
அற்ற இருள்
வெளியில் கடந்து
கொண்டிருக்கிறது
இந்த நாளின் இறுதி
பொழுது
உறக்கம்
கலைந்த நடு நிசிகளை
நிரப்புகிறான்
வார்த்தைகளை
கொண்டு




No comments:

Post a Comment