வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மழையும் நீயும்

வாசலில்
மழை
வீட்டினுள்
இருந்தும்
நனைந்தேன்
நீ பேசிகொண்டிருந்தாய்

நீயும்
மௌனமாய்
நானும்
மௌனமாய்
இருவருக்குமாய்
பேசிக்கொண்டிருந்தது
மழை

எனக்கு
மழை பிடிக்கும்
நனைந்தேன்
உனக்கும்
பிடிக்குமென்றாய்
இப்போது
கரைகிறேன்

உன்னை
ரசித்து
கொண்டிருந்தேன்
மழை
பொருமி தீர்க்கிறது
தன்னை
ரசிக்கவில்லை
என

No comments:

Post a Comment