வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

காதலின் விருட்சம்


நினைவுகள்
உதிர்ந்து
பரவுகிறது
வெளியங்கும்

எங்கும்
வியாபித்த
உன் காதலை
சுட்டுகிறது
எனது கிளைகள்

உனது
நினைவுபறவைகளை
கூடுகட்டி
சேமிக்கிறேன்



எனது
காதலின்
விருட்சம் செழிக்கிறது
நீயும்காதலும்
உள்ள மண்ணில்

எனது
கனவுகள்
மலர்ந்தும் கனிந்தும்
காதலின்
விதைகளை தூவுகிறது

சமயங்களில்
சொற்கள்
எனது
வேரருப்பினும்
உனது
வருகையின்
நம்பிக்கையில்
துளிர்க்கிறது
வெட்டப்பட்ட வேர்

2 comments: