வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

காதலின் கரையில்

பிரியங்களின்
கரையில்
நீயும்
நானும்
நமக்கு
இடையே
நகர்கிறது காதலின்
நதி
இருவரையும்
இணைத்து
எனது
கனவினை
பிரதிபலிக்கிறது
நீரின் ஆழத்தில்
புன்னைகைக்கும்
உனது வதனம்
உனது
சொற்களை
விதைத்து நகர்கிறது
காலம்
என்னுள் கிளை
பரப்பி முகிழ்க்கிறது
காதல்
நமது
நினைவுகள் நீந்தி
கொண்டிருக்கிறது
காதலின்
கரையில்
உனது கரையின்
கால்களில்
எனது முத்தங்களை
இடுகிறேன்
சிறு அலை என
காலத்தின்
எல்லைகளுக்கு
வெகு தொலைவில்
சங்கமிக்கும்
இந்நதியில்
நீயும் நானும்


No comments:

Post a Comment