வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

எறும்பு




















ஊர்ந்து
கொண்டிருக்கிறது
பெரும் பரப்பில்
எறும்பு
முன்னர் சென்ற
தடம் தேடியோ
மூச்சு காற்றில்
இணை தேடியோ
வளைந்தும்
நெளிந்தும்
பெரும் சுவரில்
நகரும் சிறு புள்ளியாய்
கேள்விகள்
மழையென
எறும்பு
ஆன்மா
உயிரென
இப்பொழுது எறும்பு
ஊர்ந்து
கொண்டிருந்தது
நினைவுகளில்
ஸ்தம்பித்து
நகர்ந்தேன்
சிறு புள்ளியென
பிரபஞ்சத்தில்

No comments:

Post a Comment