வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

மழை பெய்து-தேவதேவன்


அப்போதுதான் முடிந்திருந்தது

அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு

பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை

நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்

அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல

வானளாவிய சூனிய வெளியெங்கும்

என் பார்வையை இழுத்தபடியே

பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது

அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்

ஒரு செத்த எலி

No comments:

Post a Comment