
சொற்களுக்கு
அப்பால்
நிரம்புகிறது
மௌனம்
சொற்
படகுகள்
உடைந்து கரைகிறது
மௌன வெளியில்
உதிர்வதும்
துளிர்ப்பதுமாய்
வாழ்வு
மலரென
சமயங்களில்
முள்ளாய்
எந்த
சொல்லேனும்
உணர்த்திவிடுமா
ஏன்
சொல்லில் அடங்கா
பிரியங்களை
வார்த்தைகளுக்கு
தவமிருந்து
வடித்த
கவிதையை
காட்டிலும்
ஒரு கிழவியின்
கபடமில்லா சிரிப்பு
நிரப்பி விடுகிறது
காகிதங்களுக்கும்
அப்பால் ஒரு கவிதையை
எல்லாவற்றையும்
எழுதி விட
முடிவதில்லை
கவிதையாய்
சில கவிதைகள்
வார்த்தைகளுக்கு
அடங்காமல்
எனக்கு பொழுது போகவில்லை எனில் இப்பிடி தான் மொக்கை போடுவேன் திட்ட படாது
Very nice
ReplyDeletethanks yuva
ReplyDelete