வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நகர்ந்து கொண்டிருக்கிறது


நகர்ந்து
கொண்டிருக்கிறது நதி
மேற்பரப்பில்
மிதக்கும் மேகங்களை
சுமந்து
யுகாந்திர
படிமங்கள்
நிறைந்த வெளியில்
நழுவிய
காலத்தின்
கணங்களை
கையிலேந்தி
நகர்ந்து கொண்டே இருக்கிறது
நதி
வேரினை தழுவி
விடை பெரும்
நதிக்கு
விருட்சம்
தரமுடிந்ததேல்லாம்
உதிர் இலைகள் மட்டுமே

1 comment: