வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ஒரு கூழாங்கல்

ஒரு கூழாங்கல்
—————–
ஒரு கூழாங்கல்லை
வாயில் போட்டுக் கொண்டேன்
அது இதுவரை தான் சார்ந்திருந்த
மண்ணின் சுவையை
நாக்கில் தடவுகிறது

மண்
கல்லின் சுவையை
தக்கவைத்துக்கொண்டிருக்குமா என
ஒரு கூழாங்கல் யோசிப்பதேயில்லை

- மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment