வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

இலைகள் உதிரா மரம்

இருக்கத்தான் செய்கின்றது
எல்லோரிடத்தும்
ஓர் கதை
பொதுவில் சொல்லவும்
மறைத்துச்சொல்லவும்
ரகசியமாய் சொல்லவும்
தனக்குள் சொல்லிக்கொள்ளவும்
அதன்
வடிவமும் முடிவும்
மட்டுமே மாறி மாறி
வதைபட்டுக்கொண்டிருக்க
இலைகள் உதிரா
மரக்கிளைகளைக் கொண்ட
உணர்வுகளற்ற
நீர்த்த வெளியில்
துள்ளுவது
எதுவாக இருந்துவிடமுடியும்

--http://nathiyalai.wordpress.com

No comments:

Post a Comment