வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கடல்வெளியாய் நீ

உன்
கரைகளில்
நின்று உடைந்த
என்னை
பொறுக்குகிறேன்
கிளிஞ்சல்கள் பொறுக்கும்
சிறுமியென
உன்
வார்த்தைகள்
மேலும்
அலைகழிக்கும்
உக்கிரம் நிறைந்த
அலைகலேன
என்
கனவினால்
கட்டும்
மணல் வீடுகளை
கலைத்து
இன்பம் கொள்கிறாய்
இறுதியாய்
உன் முன்
மண்டியிட்டு
கேட்பது
என் உயிரை
எடுத்து கொண்டு
உடலை
வீசி விடாதே
உன் கரைகளில்
அநாதை
பிணமாய்

_________________

No comments:

Post a Comment