வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நன்றி தோழி

வாழ்வின்
துயர்
மழைகளில்
குடையாகிறது
உன் நடப்பு

இலக்கியத்தில்
பெண்களுக்கு
பருவத்திற்கு
ஒரு பெயர்
நட்ப்பிர்க்கு
ஒரே பெயர்

வாழ்வின்
சரிவுகளில்
கை கொடுக்கிறது
உன் வார்த்தைகள்

உன்
நட்பின் மூலம்
கைபிடித்து
அழைத்து
செல்கிறாய்
நம்பிக்கை
தேசத்திற்கு

ஓயாமல்
நகரும் வாழ்வில்
உன் நட்ப்பே
இளைப்பாறுதல்

ஒரு
வேளை
நாம் பிரியலாம்
ஆனால் உன்
பெயரை
கேட்கும் பொழுதில்
மலர்ந்து விடுகிறது
நட்பின் மலர்
நன்றி இறைவா
சாபம் கொடுத்தே
பழக்கப்பட்ட
நீ கொடுத்த
வரம் இந்த தோழி
இந்த நட்ப்பு

No comments:

Post a Comment