வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ஊர் குருவிகள்

இப்போதெல்லாம்
ஊர் குருவிகள்
காண
கிடைப்பதில்லை

மரங்களோடு
மனதையும்
அழித்த
மனிதர்களோடு
வாழ
பிடிக்கவில்லை போல

மரம்
அற்றுப்போனதால்
கூகுளில் கூடு
கட்டி இருக்கலாம்

கைபேசி
கோபுரங்களின்
நிறைந்த
அலைவரிசையில்
விஷம் கக்கும்
வார்த்தைகளால்
அருகி இருக்கலாம்

உயிரற்ற
மின்வடங்களுகாய்
உயிரை தரும்
மரம்
அழிப்பவர் ஆயிற்றே
நாம்

இது
தொலைந்ததில்
வருத்தம் தான்
ஆனாலும் பெரும்
கவலை
நாளை இவர்கள்
இந்த
பூமிபந்தை
தொலைத்து
விட கூடாதே

No comments:

Post a Comment