வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

ஒரு மலர் விருட்சம்

ஒரு
மலர் விருட்சம்
கொள்ளை
கடை பகுதியில்

பிரபஞ்சத்தின்
பரபரப்பு
அற்ற தனி
சூழலில்

மண்ணில்
விழுந்த
விதைக்கு
மலர்களை
பரிசாய் தந்து
கொண்டிருந்த
விருட்சம்

அசாதரணத்தில்
அங்கே
சென்ற போது
வார்த்தையை
காட்டிலும்
சிறிய பறவைகள்
மலர்களில்
முத்தம்
பதித்து கொண்டிருந்தது
தன்
உதிர்ந்த
மலர்கள்
புடைசூழ
விருட்சம்
நின்றது ஒரு
அழகிய கனவென

சுழல
தொடங்கியது
பிரபஞ்சம்
விருட்சதினை
அச்சாய் கொண்டு



No comments:

Post a Comment