வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

எந்த நல்லோனுக்காய்

முக்கண்ணன்
முடி துறந்த
கங்கையென,
ஊழி
முன்னோட்டமாய்
வானம் உடைந்து
உக்கிரம் கொண்டு
வீழ்ந்தது மழை,
எப்பொழுதும்
மனிதர்களால்
நிறையும் சாலை
மழையால் நிறைந்தது, 
சாரல்
மட்டும்
சந்திக்கும் இடங்களில்,
நடுங்கி கொண்டும்
ஒடுங்கியும்
ஆடு மாடு
கூட நிறைய
மனிதர்கள்,
மழை
கிழித்து கடந்தனர்
குடை கொண்டவர்கள்,
கனத்த
மழையை காட்டிலும்
நழுவிய கணங்கள்
மனதுக்குள்
கனக்க,
நனைந்து கடக்க
நினைக்க,
சொந்த ரத்தம்
வீழ்ந்து கிடந்தும்
வேறு திசை காணும்
இவர்களை
நனைக்க மறுத்து
நின்று போனது அப்பெருமழை,
இருந்தும்
ஒரு கேள்வி
கனக்கிறது விடை
புரியாது,
எந்த
நல்லோனுக்காய்
இங்கே பெய்து
தொலைத்தது
இம்மழை என ?

No comments:

Post a Comment