வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

பெயர் சொல்ல மாட்டேன்-வைரமுத்து

பெயர் சொல்ல மாட்டேன்———————————-
மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு
- சிலமின்னல்கள் எனை உரசிப்
போனதுண்டுதேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
- மனம்சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டுமோகனமே
உன்னைப்போல என்னையாரும் -
என்மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லைஆகமொத்தம்
என்நெஞ்சில் உன்னைப்போல - எரிஅமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்
விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளிவிந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒருதாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறுசிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்
உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடிதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அதுதெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடிஎவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்
கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடிதூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுகபூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்
கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளிகுறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணைமுட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சிஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

2 comments: