வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...-தேவதேவன்


ஒரு பறவை நீந்துகிறது

சொற்களை வாரி இறைத்தபடி

சொற்களை வாரி இறைப்பதனாலேயே

அது நீந்துகிறது

காற்றின் துணையும் உண்டு

நீ இக்கவிதையை வாசிக்கையில்

அமைதியான ஏரியில்

துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்

படகுப்பயணம் போல

கேட்கிறதா உனக்கு

அப்பறவையிந் சிறகசைவு தவிர

வேறு ஒலிகளற்ற பேரமைதி ?

சொற்பெருவெளியில்

சொல்லின் சொல்லாய் அப்பறவை

தன் பொருளை தேடுவதாய்

சொற்களை விலக்கி விலக்கி

முடிவற்று முன் செல்கிறது

அப்போது

உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?

பரவசமா ?

ஏகாந்தமா ?

குற்றவுணர்ச்சியின் கூசலா ?

தனிமையா ?

தாங்கொணாத துக்கமா ?

இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை

உன்னில் உண்டாக்கி விடலாம்

ஆனால் எந்தபொறுப்பையும்

அறிந்திரராதது அது .


No comments:

Post a Comment