வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நட்புக்காலம் -அறிவுமதி

என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும் படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்.

தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று

No comments:

Post a Comment