வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நிசி-தேவதேவன்


இரை பொறுக்கவும்

முட்டை இடவும் மாத்திரமே

பூமிக்கு வந்தமரும்

வானவெளிப்பறவை ஒன்று

இட்ட ஒரு பகல் முட்டையின்

உட்கரு நிசியுள்

பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்

உறங்காது துடிக்கும் நான்

என் அவஸ்தைகள்

கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா

பரிணாம கதியில்மனிதனை புதுக்கி

ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா

பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி

இரவெல்லாம் தெறிக்கும்

என் சிந்தனைகள் வேதனைகள்

ஏன் இவ்வேதனை ?

எதற்கு இச்சிந்தனைகள் ?

நானே அறியாது

என்னில் கலக்கும் ஜீன்கள்

கருவே அறியாது

கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?

இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்

என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்

நான் என்று பிறப்பேன் ?

அல்ல மீண்டும் மீண்டும்

முட்டை இடவும் இரை ப்றுக்கவும்

இரைக்காய் சக ஜீவிகளுடன்

போராடவும் மாத்திரமே

பூமிக்கு வந்தமரும்

அதே வானவெளிபறவையாக

No comments:

Post a Comment