வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

சிறகுகள்-தேவதேவன்


வானம் விழுந்து நீர்

சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை

நீரில் எழுந்தது வானம்

சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு

சிறகினுள் எரியும் சூரியத்தகிப்பே

சிறகடிப்பின் ரகசியம் ஆகவேதான்

சுய ஒளியற்ற வெறும் பொருளை

சிறகுகள் விரும்புவதில்லை

பூமி போன்ற கிரகங்களை

அது நோக்குவதேயில்லை

[சிறகடிக்கையில்

வெட்கி ஒடுங்கிக் கொள்கின்றன

பறவையின் கூர்நகக் கால்கள்]

சூர்யனுக்குள் புகுந்து வெறுமே

சுற்றிசுற்றி வருகின்றன சிறகுகள்

சிறகின் இயல்பெல்லைக்குள்

நிற்குமிடமென ஏதுமில்லை

வெளியில் அலையும் சிறகுகளுக்கு

இரவுபகல் ஏதுமில்லை


No comments:

Post a Comment