வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

அமைதி எனபது -தேவதேவன்


பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்


அமைதி என்பது மரணத் தறுவாயோ ?


வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?


வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.


அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?


எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?

1 comment: