வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

பெண் பிள்ளைகள்

பெண் பிள்ளைகள்

பிறக்கும்போதே

பழகவேண்டும்

அவர்கள் அற்ற

நாட்களை

எவ்வாறு

தனித்து இருப்பது

என்று

ஏனெனில்

அவர்கள்

வளர்ந்த பிறகு

பிடுங்கி மாற்றப்படும்

மரம் போன்றவர்கள்

ஆணி வேர்

பதிந்த மரம்

வெற்றிடம் செல்ல

வளர வெகு

கடினம்

ஆனால்

மரம் இருந்த

பூமி பள்ளம்

காலம்

முழுதும்

தங்கி நிற்கும்

அக்காயத்தை

No comments:

Post a Comment