வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

வண்ணத்து பூச்சி ஏன் உயர பறக்க கூடாது

வண்ணத்து பூச்சி

ஏன் உயர

பறக்க கூடாது

தன் சிறகின்

வண்ணங்களை

வனமெங்கும்

நிரப்பியபடி

நீலமும்

சிவப்பும்

கொண்ட மேகங்கள்

வண்ணமாய் மலரட்டும்

மரங்களின் கிளைகளில்

பூக்களென மாறட்டும்

நிதமும் வானம்

காணட்டும்

அதன் சிறகுகளில்

வானவில்

No comments:

Post a Comment