வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நானே அவனை மன்னித்து விடலாம்

சாலை
நிறைந்த
சேற்றினை மேல்
எரிந்து கடக்கிறது
ஒரு வாகனம்

வெகுண்டு
எழ நினைத்தேன்
அதனால் ஏதும்
நிகழாது

அவ்வாறு
நிகழ்வதால்
அவன் வாகன
கண்ணாடியை நொறுக்கலாம்
நீண்ட மணித்தியால
விவாததிற்கு பின்
ஒரு மன்னிப்பை
கோரலாம்
அதுவும்
நாய்க்கு வீசும்
ரொட்டி துண்டென
வீசுவான்
அதற்க்கு
நானே அவனை
மன்னித்து விடலாம்
என் இயலாமைக்கு
இதை விட
சிறந்த பெயர்
ஏதும் இருக்க இயலாது

2 comments:

  1. //என் இயலாமைக்கு
    இதை விட
    சிறந்த பெயர்
    ஏதும் இருக்க இயலாது//

    அருமை!

    ReplyDelete