வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

த.அகிலன் in கவிதைகள் பிரியம்

கவிதைகள் பிரியம் /01

அவள் அழைத்துப்போனகனவின் பசிய நிலத்தில்வானவில்லின்வர்ணங்களைக்கொண்டபறவையின் பாடல்வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.
பாடலின்திசைகளில்நான் கிறங்கிய கணத்தில்சடுதியாய் நீங்கிப்போனாள்கூடவே போயிற்றுஅவளது நிலமும்வானவில் பறவையும்
நான் அலைந்துகொண்டிருக்கிறேன்.அந்த கனவுக்குள்மறுபடியும் நுழையும்திசைகளைத் தேடி.

நிலவு

த.அகிலன் in கவிதைகள்

இரண்டுசிவப்பு வெளிச்சங்களிற்குமேலாலெழும் நிலவுஅன்றைக்கு மிருந்தது.
ஒருவிதவைத்தாயின்இளைய மகனைஅவர்கள் களவாடிப்போனஇரவில்…
பைத்தியக்காரியைப்போல்தலைவிரி கோலமாய்தெருவில் ஓடியஅவளைச் சகியாமல்மேகங்களினடியில்முகம் புதைத்துக்கொண்டது.
பின்பொரு மழைநாளில்அலைகளின் மேல்ஒருவன் ஏறித்தப்புகையில்…இராமுழுதும் துணையிருந்தது…
யாரும்விசாரணைகளை நிகழ்தும் வரைஎல்லாவற்றினதும்மௌனச் சாட்சியாய்அலைந்து கொண்டேயிருக்கும்அது.

No comments:

Post a Comment