வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!

தமிழக அரசு போற்றும் ராம பக்தி ! கடந்த காலம் கண் எதிரே தோன்றுகிறது...!
(Where the past comes alive...)


– என்று தலைப்பிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு போஸ்டரை
வெளியிட்டிருக்கிறது. அதில், ராமரும், லக்ஷ்மணரும் நின்று கொண்டிருக்க, வானரர்கள் பெரும் கற்களைச் சுமந்து, சமுத்திரத்தில் பாலம் அமைத்துக் கொண்டிருக்கும் காட்சி ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது.

தவிர,

""...ராமபிரானின் தாமரைப் பாதங்களின் ஆசிகளை, இன்னமும் இந்தத் தண்ணீர்
தாங்கி நிற்கிறது;

...வானர சேனை இலங்கைக்குச் சென்று சீதையைக் காப்பாற்ற, சமுத்திரத்தைக் கடந்த இடம் இதுதான்''




– என்றும் அந்த போஸ்டரில், தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சொல்லி இருக்கிறது. இந்த போஸ்டர் ஒரு விளம்பரமாக, ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஜனசதாப்தி ரயில் வண்டியில் வைக்கப்பட்டுள்ளது.

இதில், "சேது பாலம்' என்று எதுவும் இல்லையே என்ற குறை யாருக்கும் இருக்க வேண்டாம். தமிழகச் சுற்றுலாத் துறை, ராமேஸ்வரம் பற்றி வெளியிட்டுள்ள கையேட்டில் (கச்ட்ணீடடூஞுt) "சேது பாலத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சேது பந்தனம் என்கிற மிதக்கும் கல், இங்கே பார்க்க வேண்டிய விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம், "ராமர் பாலமும் இல்லை; ராமரும் இல்லை; எல்லாம் கற்பனை' என்று முதல்வர் சொல்கிறார். மறுபுறத்தில் அவருடைய தமிழக அரசு, ராமர் வரலாற்றின் ஒரு பகுதியையும், அவர் மீதான பக்தியையும் விளம்பரப்படுத்தி வருவாய் ஈட்ட முனைகிறது.

ராமரை போற்றினால், வளம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்களோ, இல்லையோ, கலைஞரின் தமிழக அரசு நம்புகிறது.



No comments:

Post a Comment