வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

நீயன்றி


எனக்குள்
புதைந்து
போகிறேன்
கண்ணீரில்
முழ்கி
நீயில்லை
யாருமற்ற
அநாதை
குழந்தையாய்
அழும் மனதுக்கு
புரிவதில்லை
அடுத்தவர் ஆறுதல்
என்னுள்
படர்ந்து
என்னையே
வீழ்த்தும்
காதல் கொடிகள்
எல்லா
பூவும் கேட்க்குமே
என்ன சொல்ல
கை பிடித்து
நடந்த சாலை
கனலாய்
கொதிக்குமே
அமர்ந்த
மரங்கள்
கண்ணீராய்
உதிர்க்கிறதே சருகுகளை
என் மேல்
கண்ணீரை தவிர
வேறு இல்லை
உன்
மணவாழ்க்கை
பரிசாய்
புன்னகை
நீ எடுத்து
கொள்
கண்ணீரை எனக்கு கொடு

No comments:

Post a Comment