வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

பெயரற்ற யாத்ரீகன் - யுவன் சந்திரசேகர்

சற்று முன்பிருந்த அன்பும்

புகையிலை விடுக்கும் புகையும்

சிறுகச் சிறுக

விடுத்துச் செல்வது

சாம்பலை மட்டுமே

****

நதியோட்டத்தில்

மிதந்து செல்லும் கிளையில்

பாடிகொண்

டிருக்கின்றன

பூச்சிகள், இன்னமும்

****

பாறைக்கருகில் நிற்கும்

ஊசியிலை மரமும் தன்

ஞாபகங்களைக் கொண்டிருக்கிறது

போலும் ; ஓர்

ஆயிரம் வருடங்கள் கழித்தும்

அதன் கிளைகள்

தரையைநோக்கி

எப்படி வளைகின்றன பாரேன்.

****

திட்டவட்டமான விதிகள் இல்லை

ஜன்னலை எப்போது

திறந்து வைப்பது

எப்போது மூடுவது என்பது பற்றி

இதெல்லாம்,

நிலவோ பனியோ

தம் நிழல்களை எவ்விதம்

படியவைக்கின்றன என்பதைப்

பொறுத்தது

****

அவன்

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவதில்லை

நீரில் இறங்குகையில்

சிற்றலையும் எழுவதில்லை

- ஜென் கவிதைகள்


No comments:

Post a Comment