வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கஜல் கவிதைகள்



என் இதயத்தை
உன்னிடம் யாசிக்கிறேன்

சாபத்தையேனும்
வரமாகக்கொடு

****************
காதலைப்போல்
இதயத்திற்கு
இன்பமுமில்லை, வலியுமில்லை

************

உன்னைச்
சொற்களில் தேடுகிறேன்
நீயோ
மெளனத்தில்
ஒளிந்திருக்கிறாய்

*************

வண்ணங்களின்
கனவே!
உன்நிழல்
என்
மரணத்தின்மீது
விழுகிற வெளிச்சம்

அக்னி சொரூபம்
என் காதல்
நீ வந்து
அணைக்கக்கூடாதா

- கோ.பாரதிமோகன்

thank you
namadhukural.blogspot.com

No comments:

Post a Comment