வானம் என்பது போதி மரம் எனது கவிதைகள் (நீங்கள் கவிதையென கருதினால் )பெரும்பாலும் துயர நதியின் நீர் திவலைகளை வார்த்தையில் மாற்றும் ஒரு ரசவாதமே தவிர வேறில்லை

கவிப்பேரரசு வைரமுத்து ரசித்த கவிதை வரிகள்

‘‘நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது’’
- அப்துல் ரகுமான் (பால்வீதி)

‘‘பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி’’

- மீரா (‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ தொகுப்பில் விடுபட்ட கவிதை ஒன்று)

வானவில்
‘‘இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது’’
- நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)

‘‘ஐந்து புலன்களும்
கால் பந்து விளையாடும்
மைதானம் உடல்
விதிகள் தெரிந்தால்
விளையாட்டு
ஆழம் தெரியாமல் ஆடினால்
பேய் மணல்’’
- சிற்பி (இறகு)

‘‘அம்பு கூர்மையாய்
இருந்தென்ன
பார்வை?’’
- ஈரோடு தமிழன்பன் (ஒரு வண்டி சென்ரியு)

காதல்
‘‘இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்ப்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்’’
- மு.மேத்தா (அவர்கள் வருகிறார்கள்)

______________________________________

நன்றி
கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்-குமுதம் 12-12-07

No comments:

Post a Comment